Indian Railways News => Topic started by irmafia on Apr 13, 2013 - 03:01:03 AM


Title - கன்னியாகுமரி-டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் இன்று மாலை ஹெலன் டேவிட்சன் எம்.பி. தொடங்கி வைக
Posted by : irmafia on Apr 13, 2013 - 03:01:03 AM

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. ஹெலன் டேவிட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி-டெல்லி நிஜாமுதீன் இடையேயான திருக்குறள் எக்ஸ்பிரஸ்” ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பேரில் ரெயில்வே அமைச்சர் கன்னியாகுமரி- டெல்லி நிஜாமுதீன்“ திருக்குறள்“ வாராந்திர விரைவு ரெயிலை வாரம் இருமுறை இயக்க கடந்த ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டார்.

கடந்த மாதம் இறுதியில் இந்த ரெயிலுக்கான பெட்டிகள் அனைத்தும் வந்தபின் ரெயில்வே நிர்வாகம் சார்பில் இந்த ரெயில் 12-ந் தேதி முதல் இயக்கப்படும் என்றும், இந்த ரெயிலின் புதிய சேவையை கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடக்கி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அந்த வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து வாரம் இருமுறை சேவை தொடங்கி வைக்கப்படுகிறது.

இந்த ரெயில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 7.15 மணிக்கு புறப்பட்டு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுடெல்லியை மாலை 6 மணிக்கு சென்றடையும். அதைபோல மறுமார்க்கத்தில் இந்த ரெயில் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் டெல்லியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு செவ்வாய் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை மாலை 6.05 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரியை புதன் மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு வந்து சேரும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.