Indian Railways News => Topic started by riteshexpert on Mar 28, 2013 - 06:00:27 AM


Title - காட்பாடி, மயிலாடுதுறைக்கு விழுப்புரத்திலிருந்து புதிய ரயில்
Posted by : riteshexpert on Mar 28, 2013 - 06:00:27 AM

விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து காட்பாடி மற்றும் மயிலாடுதுறைக்கு வரும் 29ம் தேதி முதல் புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத் வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் (2012-13) வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு ஏற்ப புதிய பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளன.
அதன்படி திருச்சி கோட்ட ரயில்வே மூலம் வரும் 29ம் தேதி விழுப்புரத்திலிருந்து, காட்பாடிக்கு புதிதாக, வண்டி எண் 56882, 56884 மற்றும் 56886 என்ற 3 புதிய பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் திருவண்ணாமலை, வேலூர் வழியாக அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று, காட்பாடிக்கு செல்கின்றன. இதேபோல் எண் 56875 என்ற பயணிகள் ரயில், விழுப்புரத்திலிருந்து கடலூர், சிதம்பரம் மற்றும் சீர்காழி வழியாக, அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று, மயிலாடுதுறைக்கு செல்கின்றன.
இவ்வாறு ரயில்வே செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.