Indian Railways News => Topic started by railgenie on Aug 03, 2013 - 21:00:03 PM


Title - பழுது பார்க்கும் மையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் மோதி ரயில் பெட்டி நொறுங்கியது|Express train collision r
Posted by : railgenie on Aug 03, 2013 - 21:00:03 PM

நெல்லை: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏசி ரயில் பெட்டி மீது நெல்லை எக்ஸ்பிரஸ் வேகமாக மோதியதால் அந்த பெட்டியின் சக்கரங்கள் மற்றும் தண்டவாளம் உடைந்தது.நெல்லை சந்திப்பு ரயில்நிலையத்தில் ரயில் பெட்டிகளை பழுதுபார்க்கும் மையம் (ஆர்.ஓ.எச் ஷெட்) உள்ளது. இம்மையத்தில் நேற்று காலை ஒரு ஏசி பெட்டியை பழுதுபார்க்கும் பணிகள் நடந்தன. நேற்று காலை சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் காலை 8.30 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பயணிகள் இறங்கிய பின்னர் ரயிலை பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே ஊழியர்கள் பிட்லைனுக்கு எடுத்து சென்றனர்.இன்ஜின் டிரைவர் வடக்குப் பக்கமாக தச்சநல்லூர் ரயில்வே கேட் வரை ரயிலை முன்னே நகர்த்தி, பின்னர் பிட்லைனுக்கு கொண்டு போக முயன்றார்.

அப்போது வயர்லெஸ்சில் சரியான தகவல் தொடர்புகள் கிடைக்காததால் நெல்லை எக்ஸ்பிரஸ் பின்னோக்கி நகர்ந்து பழுதுபார்க்கும் மையத்தில் நின்ற ஏசி பெட்டி மீது பயங்கரமாக மோதியது. சுமார் 50 அடி பின்னோக்கி நகர்ந்த ஏசிபெட்டியின் சக்கரங்கள் நொறுங்கியது.  நெல்லை எக்ஸ்பிரஸ் மோதியதால் ஏசி பெட்டி நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளம் 2 துண்டாக உடைந்தது. அப்பகுதியில் நின்றிருந்த ஒரு வேப்பமரத்தின் கிளைகளும் முறிந்து விழுந்தன. இந்த சம்பவத்தால் பழுது பார்க்கும் மையத்தில் நின்ற ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.திடீரென்று எழுந்த சத்தத்தால் டிரைவர் நெல்லை எக்ஸ்பிரசை நிறுத்தினார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வயர்லெஸ் தகவல் தொடர்பில் பழுது ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.